ADDED : செப் 23, 2025 07:41 AM

புதுச்சேரி : கருவடிக்குப்பம் கருமுத்துமாரியம்மன் கோவில் திருப்பணிக்கு ரூ. 5 லட்சம் நன்கொடையினை மறைந்த ஆனந்தன் குடும்பத்தினர் கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை, கருவடிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள கருமுத்துமாரியம்மன் மற்றும் விநாயகர் கோவில் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.
இப்பணிக்காக ரூ. 5 லட்சத்திற்கான நன்கொடையினை , கட்டடக்கலை வல்லுனரான மறைந்த ஆனந்தன் குடும்பத்தினர் கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினர்.