புதுச்சேரி: ஏம்பலத்தில் வயிற்று வலியால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஏம்பலம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அம்சவள்ளி, 42. இவருக்கு வயிற்றில் கர்ப்பப்பை கட்டி, சிறுநீர்கல் ஆகியவற்றால் அவதிப்பட்டு வந்தார்.
வயிற்று வலி அதிகமாகவே நேற்று மதியம் 12.30 மணியளவில் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிதது வருகின்றனர்.