Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி

ADDED : செப் 07, 2025 06:47 AM


Google News
புதுச்சேரி : கொசு வத்தியால் சேலையில் தீப்பிடித்து, காயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

பாக்கமுடையான்பட்டு, காமராஜர் வீதியை சேர்ந்தவர் தேனம்மாள், 73. இவர் தனியாக வசித்து வந்தார். கடந்த 3ம் தேதி, கொசு வத்தியை ஏற்றி வைத்து, கட்டிலில் படுத்திருந்தார். கொசு வத்தி நெருப்பு, அவரது சேலையில் பிடித்து எரிந்தது.அவர் அலறல் சத்தம் போடவே, பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்து, தீயை அணைத்தனர். காயமடைந்த அவரை, ஜிப்மரில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில், டி.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us