/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கத்திக்குத்து சம்பவத்தில் முதியவர் இறப்பு கொலை வழக்காக போலீசார் மாற்றம்கத்திக்குத்து சம்பவத்தில் முதியவர் இறப்பு கொலை வழக்காக போலீசார் மாற்றம்
கத்திக்குத்து சம்பவத்தில் முதியவர் இறப்பு கொலை வழக்காக போலீசார் மாற்றம்
கத்திக்குத்து சம்பவத்தில் முதியவர் இறப்பு கொலை வழக்காக போலீசார் மாற்றம்
கத்திக்குத்து சம்பவத்தில் முதியவர் இறப்பு கொலை வழக்காக போலீசார் மாற்றம்
ADDED : பிப் 06, 2024 04:47 AM
திருக்கனுார் : மண்ணாடிப்பட்டில் நிலத் தகராறில் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
புதுச்சேரி, மண்ணாடிப்பட்டு பிள்ளையார் கோயில் வடக்கு தெருவை சேர்ந்தவர் பரசுராமன், 80; விவசாயி. இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த கோபி என்பவருக்கும் இடையே நிலம் பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது
இந்நிலையில் கடந்த 31ம் தேதி இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், கோபமடைந்த கோபி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பரசுராமன் மற்றும் அவரது மகன் விஜயன் ஆகிய இருவரையும் வயிற்றில் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து பரசுராமனின் மனைவி செந்தாமரை புகாரின் பேரில் திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் கோபி மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்து கடந்த 1ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பரசுராமன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 7:30 மணிக்கு இறந்தார்.
இதையடுத்து, திருக்கனுார் போலீசார் கொலை முயற்சி வழ்கை, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். முதியவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.