Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டிரைவர் மாயம்

டிரைவர் மாயம்

டிரைவர் மாயம்

டிரைவர் மாயம்

ADDED : அக் 19, 2025 04:16 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: வெளியூருக்கு சவாரி சென்ற டிரைவர் மாயமானது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தோப்பை சேர்ந்தவர் ஜெயபதி, 35; கார் டிரைவர். கடந்த 11ம் தேதி, வெளியூருக்கு சவாரி செல்வதாக, அவரது மனைவியிடம் கூறி விட்டு சென்றார். 5 நாட்கள் ஆகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. மொபைல் போனும், சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

பல இடங்களில் விசாரித்தும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us