/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரூ.23 லட்சத்தில் மேம்பாட்டு பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்புரூ.23 லட்சத்தில் மேம்பாட்டு பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ.23 லட்சத்தில் மேம்பாட்டு பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ.23 லட்சத்தில் மேம்பாட்டு பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ.23 லட்சத்தில் மேம்பாட்டு பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜன 04, 2024 03:11 AM

பாகூர்; கன்னியக்கோவில் மற்றும் காட்டுக்குப்பம் கிராமத்தில், 22 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சாலை மேம்பாட்டு பணிகளை செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், காட்டுக்குப்பம் சுப்பையா நகரில் 3 லட்சத்து 70 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை, மாரியம்மன் கோவில் தெற்கு வீதியில் சிமென்ட் சாலை அமைக்க 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய், பாலம் அமைக்க 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், கன்னியக்கோவில் டி.டி.ஆர். நகரில் 11 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் தார் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை நடந்தது.
செந்தில்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து, பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் சுப்ரமணி, இளநிலை பொறியாளர் பிரதீப் உட்பட பலர் உடனிருந்தனர்.