கொலை மிரட்டல்: ஒருவர் மீது வழக்கு
கொலை மிரட்டல்: ஒருவர் மீது வழக்கு
கொலை மிரட்டல்: ஒருவர் மீது வழக்கு
ADDED : மார் 19, 2025 04:18 AM
புதுச்சேரி : இடத்திற்கு வாடகை கேட்ட உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மூலக்குளம் மோதிலால் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம், 56; இவர், வில்லியனுார் அருகே தனது ெஷட் இடத்தை ஒருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அந்த நபர் வாடகையை சரியாக கொடுக்கததால், மொபைல் போனில் தொடர்பு கொண்டு ஆறுமுகம் கேட்டார். அப்போது, அந்த நபர், ஆறுமுகத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.