Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போலீஸ் மீது தாக்குதல் கடலுார் வாலிபர் கைது

போலீஸ் மீது தாக்குதல் கடலுார் வாலிபர் கைது

போலீஸ் மீது தாக்குதல் கடலுார் வாலிபர் கைது

போலீஸ் மீது தாக்குதல் கடலுார் வாலிபர் கைது

ADDED : மார் 20, 2025 04:48 AM


Google News
பாகூர்: ஆபாசமாக திட்டி, தாக்கி பணி செய்ய விடாமல் தடுத்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் எதிரே நேற்று முன்தினம் இரவு பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கிருமாம்பாக்கம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்து ஆபாசமாக திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்து தாக்குதல் நடத்தினார். போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அவர், கடலுார், சூரப்பன்நாயக்கன் சாவடி சதிஷ், 25, என்பது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைதுசெய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us