Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ரூ. 2.80 லட்சம் காப்பர் திருட்டு

கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ரூ. 2.80 லட்சம் காப்பர் திருட்டு

கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ரூ. 2.80 லட்சம் காப்பர் திருட்டு

கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ரூ. 2.80 லட்சம் காப்பர் திருட்டு

ADDED : ஜூன் 25, 2025 07:59 AM


Google News
திருக்கனுார் : லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 320 கிலோ காப்பர் பொருட்களை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காட்டேரிக்குப்பம் அடுத்த லிங்காரெட்டிபாளையத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வந்தது.

இந்த ஆலை கடந்த 2016ம் ஆண்டு முதல் மூடப்பட்டுள்ளது. அங்கு, மூன்று ஷிப்ட்களில் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 18ம் தேதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் உள்ளே புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த டிரான்ஸ்பார்மரை உடைத்து, அதிலிருந்த 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 320 கிலோ காப்பர் பொருட்களை திருடி சென்றனர்.

இதுகுறித்து நிர்வாக இயக்குநர் யஷ்வந்தையா அளித்த புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, காப்பர் பொருட்களை திருடி சென்ற நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us