/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பா.ஜ.,வினர் மீது வழக்கு; காங்., மகளிரணி புகார் பா.ஜ.,வினர் மீது வழக்கு; காங்., மகளிரணி புகார்
பா.ஜ.,வினர் மீது வழக்கு; காங்., மகளிரணி புகார்
பா.ஜ.,வினர் மீது வழக்கு; காங்., மகளிரணி புகார்
பா.ஜ.,வினர் மீது வழக்கு; காங்., மகளிரணி புகார்
ADDED : செப் 04, 2025 04:21 AM

புதுச்சேரி : எதிர்க்கட்சி தலைவர் ராகுலின், உருவப்படத்தை தீயிட்டு அவமரியாதை செய்த பா.ஜ.,வினர் மீது வழக்குப் பதியக் கோரி, காங்., மகளிரணியினர் ஐ.ஜி., அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் உருவப்படத்தை எரித்து, அவமரியாதை செய்து, காங்., அலுவலகத்தை, பா.ஜ.,வினர் கடந்த 1ம் தேதி முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும், பெண்களை இழிவுப்படுத்தியும், தகாத வார்த்தைகளால் கோஷமிட்டு ஊர்வலம் சென்றனர்
பா.ஜ., வின் இந்த செயலை கண்டிக்கிறோம். எனவே, பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், ஊர்வலத்தில் பங்கேற்ற எல்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காங்., மகளிரணி தலைவி நிஷா தலைமையில் மகளிர் அணியினர் நேற்று ஐ.ஜி., அலுவலகத்தில் புகார் அளித்தனர்.