ADDED : மார் 09, 2026 04:06 AM

வாகனங்கள் நிறுத்துவதால் விபத்து மரப்பாலம் சந்திப்பில் வாகனங்கள் சாலையில் நிறுத்துவதால், விபத்து ஏற்படுவதை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். முருகன், மரப்பாலம். முறையாக சாலை அமைக்கப்படுமா? சத்யா நகர் 5வது குறுக்கு தெருவில் இடைவெளி விட்டு சாலை போடப்பட்டுள்ளதால், மழை பெய்யும் போது, தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஜோசப், புதுச்சேரி.
நாய்கள் தொல்லை தேங்காய்த்திட்டு வடக்கு பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அருளப்பன், தேங்காய்த்திட்டு. போக்குவரத்து நெரிசல் நைனார்மண்டபம் நாகம்மாள் நகர் சந்திப்பில், போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த வேண்டும். காந்தி, நைனார்மண்டபம். சாலையோர மீன் கடைகளால் பாதிப்பு உப்பளம் பழைய துறைமுகம் செல்லும் வழியில், சாலையை ஆக்கிரமித்து மீன் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். முருகேசன், உப்பளம்


