Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நகராட்சி பள்ளியில் செம்மொழி தின விழா

நகராட்சி பள்ளியில் செம்மொழி தின விழா

நகராட்சி பள்ளியில் செம்மொழி தின விழா

நகராட்சி பள்ளியில் செம்மொழி தின விழா

ADDED : ஜூன் 04, 2025 01:04 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி : கோட்டக்குப்பம் நகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி செம்மொழி தின விழா நடந்தது.

நகர்மன்றத் தலைவர் ஜெயமூர்த்தி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜீனத் பீவி முபாரக் முன்னிலை வகித்தார்.

விழாவில், 10வது, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு, 25வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சரவணன் ஏற்பாட்டில் முதலிடம் பெற்ற4 மாணவர்களுக்கு தலா 10 ஆயிரம்,இரண்டாம் இடம் பிடித்த 3 மாணவர்களுக்கு தலா 5 ஆயிரம், மூன்றாம் இடம் பிடித்த 3 மாணவர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் செல்வி வரவேற்றார். பள்ளி தொடர்ந்து, 9 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து வருவதற்கு காரணமான 22 ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். இதில், மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் வினோபாரதி, கவுன்சிலர்கள் கலா மணிகண்டன், ஆதிலட்சுமி பாஸ்கரன், வீரப்பன், சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us