Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தைப்பூசத்தை முன்னிட்டு மிளகாய் பொடி அபிஷேகம்

தைப்பூசத்தை முன்னிட்டு மிளகாய் பொடி அபிஷேகம்

தைப்பூசத்தை முன்னிட்டு மிளகாய் பொடி அபிஷேகம்

தைப்பூசத்தை முன்னிட்டு மிளகாய் பொடி அபிஷேகம்

ADDED : ஜன 26, 2024 12:19 AM


Google News
Latest Tamil News
திருக்கனுார் : செட்டிப்பட்டு முருகன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பக்தருக்கு மிளகாய் பொடி அபிஷேகம் நடந்தது.

திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் வள்ளி தேவசேனா சமேத முருகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 52ம் ஆண்டு தைப்பூச பால் காவடி விழா நேற்று நடந்தது.

இதையொட்டி, காலை 7:30 மணிக்கு சங்கராபரணி ஆற்றங்கரைக்கு சென்று கரகம் ஜோடித்து, சுவாமிக்கு பால்காவடி எடுத்து வந்து, பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, மஞ்சள் இடித்தல், மாலை அணிந்து விரதம் இருந்த பக்தருக்கு மிளகாய் பொடி அபிஷேகம், அக்னி சட்டி எடுத்தல், செடல் உற்சவம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு மேல் டயர் வண்டி இழுப்பது, வேல் அணிந்து வருவது, தேர் இழுப்பது உள்ளிட்டவை நடந்தது. இதில், செட்டிப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தை சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us