/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பேனர் வைத்தவர் மீது வழக்குப் பதிவு பேனர் வைத்தவர் மீது வழக்குப் பதிவு
பேனர் வைத்தவர் மீது வழக்குப் பதிவு
பேனர் வைத்தவர் மீது வழக்குப் பதிவு
பேனர் வைத்தவர் மீது வழக்குப் பதிவு
ADDED : மார் 25, 2025 04:03 AM
பாகூர்: அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்ட சம்பவம் குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரியில் பொது இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்க தடை சட்டம் உள்ளது. தடையை மீறி பேனர்கள் வைப்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி - கடலூர் சாலை காட்டுக்குப்பம் முதல் கன்னியக்கோவில் வரையில், போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூராக பேனர்கள் வைக்கப்பட்டிருப்பதாக, புதுச்சேரி பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு உதவி பொறியாளர் ஆறுமுகம் கிருமாம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் பூபாலன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.