Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதியவர் தற்கொலையில் திருப்பம் நிதி நிறுவன ஊழியர்கள் மீது வழக்கு

முதியவர் தற்கொலையில் திருப்பம் நிதி நிறுவன ஊழியர்கள் மீது வழக்கு

முதியவர் தற்கொலையில் திருப்பம் நிதி நிறுவன ஊழியர்கள் மீது வழக்கு

முதியவர் தற்கொலையில் திருப்பம் நிதி நிறுவன ஊழியர்கள் மீது வழக்கு

ADDED : ஜூலை 04, 2025 02:25 AM


Google News
திருக்கனுார்: மளிகை கடை உரிமையாளர் துாக்குப்போட்டு தற்கொலை செய்த கொண்ட விவாகாரத்தில் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தின் அடிப்படையில் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருக்கனுார் அடுத்த சோரப்பட்டு, தென்னஞ்சாலை வீதியை சேர்ந்தவர் பெரியண்ணசாமி, 59; மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு, கவுரி என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இவர் கடந்த மார்ச் 15ம் தேதி வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி கவுரி திருக்கனுார் போலீசில், புகார் அளித்தார்.

அதன் பேரில், போலீசார், சந்தேக மரணம் 194 பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். கடந்த ஏப்ரல் 17 ம் தேதி அவரது மளிகை கடையை திறந்து பார்த்தபோது, அங்கு கடிதம் ஒன்று இருந்தது. அதில், தனியார் நிதி நிறுவனத்தில் பெற்ற கடனுக்காக, தன்னை அவமானப்படுத்தியதால், தற்கொலை செய்து கொள்ளுவதாக எழுதி உள்ளதாக, அவரது மனைவி கவுரி மீண்டும் திருக்கனுார் போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து, அந்த கடிதத்தின் உண்மை தன்மை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், கடிதம் பெரியண்ணசாமி எழுதியது தான் என்பது சமீபத்தில் உறுதியது.

இதையடுத்து, நிதி நிறுவன மேலாளர் ஜெயச்சந்திரன், ஊழியர் முருகன் ஆகியோர் மீது தற்கொலைக்கு துண்டியதாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us