Dinamalar Logo


பெண் மீது வழக்கு

பெண் மீது வழக்கு

பெண் மீது வழக்கு

பெண் மீது வழக்கு

ADDED : ஏப் 26, 2025 04:15 AM


Google News
புதுச்சேரி : மூலக்குளம், திருமலைதாயார் நகரை சேர்ந்தவர் தங்கராசு, 73; கல்வித்துறை யில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர், வசிக்கும் பகுதியில் விநாயகர் கோவில் கட்டி, கும்பாபி ேஷகம் நடத்தினர்.

தங்கராசுவுக்கும் அப்பகுதியில் உள்ள சண்முகசுந்தரம் மனைவி அனுமித்தாவுக்கும் கோவில் கட்டுவதில் பிரச்னை இருந்தது. நேற்று முன்தினம், தங்கராசு வீட்டிற்கு சென்ற, அனுமித்தா, அவருக்கு மிரட்டல் விடுத்தார். அனுமித்தா மீது ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்தனர்.