Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கஞ்சா விற்பனை : இருவர் கைது

கஞ்சா விற்பனை : இருவர் கைது

கஞ்சா விற்பனை : இருவர் கைது

கஞ்சா விற்பனை : இருவர் கைது

ADDED : மே 21, 2025 11:14 PM


Google News
பாகூர்: பாகூர் அடுத்த கரையாம்புத்துார் பகுதியில் கஞ்சா புழக்கம் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார், அப்பகுதியில் ரோந்து சென்றனர். கரையாம்புத்தூர் - சொர்ணவூர் சாலையில் உள்ள தனியார் மதுகடை அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர்.

அவர்கள், சிறு சிறு பொட்டங்களாக கஞ்சாவை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில், திருவள்ளூர் மாவட்டம், காட்டுக்குப்பம், விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த அஜித் 23; விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம், சொர்ணவூர் கீழ்பாதி பகுதியைச் சேர்ந்த சஞ்சய் 23; என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 150 கிராம் கஞ்சா பொட்டாலங்களை பறிமுதல் செய்தனர். இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us