Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பைக் மீது பஸ் மோதல் ஒருவர் பலி; 2 பேர் காயம்

பைக் மீது பஸ் மோதல் ஒருவர் பலி; 2 பேர் காயம்

பைக் மீது பஸ் மோதல் ஒருவர் பலி; 2 பேர் காயம்

பைக் மீது பஸ் மோதல் ஒருவர் பலி; 2 பேர் காயம்

ADDED : பிப் 25, 2024 04:59 AM


Google News
காரைக்கால் : காரைக்காலில் அரசு பஸ் மோதி ஒருவர் இறந்தார்; இருவர் காயமடைந்தனர்.

காரைக்கால், திருப்பட்டினம், கே.பி.எம்., தோட்டத்தை சேர்ந்தவர் ராஜா, 51. இவருக்கு அரசு மருந்துவமனையில் டயாலிசிஸ் செய்வது வழக்கம். இதற்காக அவரை, நேற்று முன்தினம் ஸ்கூட்டியில் அழைத்துக் கொண்டு அவரது மகள் சென்று கொண்டிருந்தார்.

நாகூர் மெயின் ரோடு, அம்மாள் சத்திரம் அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த தமிழக அரசு பஸ் ஸ்கூட்டியில் மோதியது. ராஜா, அவரது மகள் மற்றும் முன்னால் பைக்கில் சென்றவர் உட்பட மூவரும் காயமடைந்தனர். மூவரும் அரசு மருந்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பலனின்றி ராஜா இறந்தார். விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவர் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த முத்துகுமாரசாமி, 30, என்பவர் மீது, நகர போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us