Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு 4ம் முறையாக வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு 4ம் முறையாக வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு 4ம் முறையாக வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு 4ம் முறையாக வெடிகுண்டு மிரட்டல்

ADDED : மே 14, 2025 06:05 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி : புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு நேற்று நான்காம் முறையாக வந்த வெடிகுண்டு மிரட்டலால் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரி கவர்னர் மாளிகை உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு அவ்வப்போது இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கவர்னர் டில்லி சென்றுள்ள நிலையில், நேற்று காலை 11:45 மணி அளவில், கவர்னர் மாளிகைக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

தகவலின்பேரில் எஸ்.பி.,ரகுநாயகம் தலைமையில் பெரியக்கடை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப் இன்ஸ்பெக்டர் முருகன், மோப்ப நாய் டோனி மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று பகல் 12:15 மணி முதல் 1:00 மணிவரை நடத்திய சோதனையில், புரளி என்பது உறுதியானது.

இதே கவர்னர் மாளிகைக்கு, கடந்த மாதம் 14, 23 மற்றும் கடந்த 9ம் தேதிகளில் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் நேற்று நான்காம் முறையாக மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது, போலீசாரை குழப்பமடையச் செய்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us