Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கவர்னர் மாளிகைக்கு 6வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

கவர்னர் மாளிகைக்கு 6வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

கவர்னர் மாளிகைக்கு 6வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

கவர்னர் மாளிகைக்கு 6வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

ADDED : மே 26, 2025 12:28 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி : புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு நேற்று 6வது முறையாக வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரி கவர்னர் மாளிகை, முதல்வர் வீடு, ஜிப்மர் மருத்துவமனை, தனியார் ஹோட்டல்கள், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு அவ்வப்போது இ- மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை 6:00மணி அளவில், கவர்னர் மாளிகைக்கு இ- மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தகவலின்பேரில் எஸ்.பி.,ரகுநாயகம் தலைமையில் பெரியக்கடை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப் இன்ஸ்பெக்டர் முருகன், மோப்ப நாய் டோனி மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று மாலை 6:15மணி முதல் 7:30 மணி வரை நடத்திய சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதியானது.

இதேபோல்,கவர்னர் மாளிகைக்கு கடந்த ஏப்ரல் மாதம் 14, 23, மே மாதம் 9, 13 மற்றும் 19 ஆகிய தேதிகளில் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் நேற்று 6வது முறையாக மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

கவர்னர் மாளிகைக்கு தொடர்ந்து 6வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளநிலையில், இதுவரையில் மிரட்டல் விடுக்கும் நபர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.இதுகுறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் கேட்டால், வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான வழக்கு விசாரணை சரியான பாதையில் செல்கிறது என்பதை தவிர, வேறு எந்தவித தகவலும் தெரிவிப்பதில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us