Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தவளக்குப்பத்தில் பைக் திருட்டு

தவளக்குப்பத்தில் பைக் திருட்டு

தவளக்குப்பத்தில் பைக் திருட்டு

தவளக்குப்பத்தில் பைக் திருட்டு

ADDED : ஜன 11, 2024 11:55 PM


Google News
புதுச்சேரி: தவளக்குப்பத்தில் வீட்டில் நிறுத்திருந்த பைக்கை திருடிய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

தவளக்குப்பம் அடுத்த அபிேஷகப்பாக்கம் சண்முகா டைமண்ட் சிட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் விக்னேஷ்குமார், 21; இவர் ஏம்பலம் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்து விட்டு தனது உறவினரின் பைக்கை வீட்டு முன்பு நிறுத்திருந்தார். மறுநாள் காலையில் எழுந்து பார்க்கும் போது பைக்கை காணாவில்லை.

புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடிவருகின்றனர். நேற்று முன்தினம் அபிேஷகப்பாக்கம் ஒப்பந்ததாரர் வீட்டில் இருந்து கட்டுமான பொருட்கள் மற்றும் பித்தளை பொருட்களை மர்ம நபர்கள் திருடிய சென்றது குறிப்பிடதக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us