ADDED : ஜூன் 26, 2025 01:29 AM

புதுச்சேரி : கனரா வங்கி சார்பில், வாடிக்கையாளர் உரிமை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கனரா வங்கி, புதுச்சேரி மண்டல அலுவலகம் சார்பில், வாடிக்கையாளர் உரிமை, ஆர்.பி.ஐ., குறைதீர்ப்பாளர் சேவை பற்றி விழிப்புணர்வு ஊர்வலம் கடற்கரை சாலையில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, மண்டல மேலாளர் தருண் சபரிநாத் தலைமை தாங்கினார்.வங்கி, ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வு ஊர்வலம், கடற்கரை சாலையில் இருந்து புறப்பட்டு, காந்தி வீதி, நேரு வீதி வழியாக சென்று ராக்பீச் அருகே நிறைவடைந்தது.