Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எஸ்.எஸ்.ஐ., மீது தாக்குதல் :சகோதரர்களுக்கு வலை

 எஸ்.எஸ்.ஐ., மீது தாக்குதல் :சகோதரர்களுக்கு வலை

 எஸ்.எஸ்.ஐ., மீது தாக்குதல் :சகோதரர்களுக்கு வலை

 எஸ்.எஸ்.ஐ., மீது தாக்குதல் :சகோதரர்களுக்கு வலை

ADDED : மார் 11, 2026 04:03 AM


Google News
அரியாங்குப்பம்: சிறப்பு சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய சகோதரர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மணவெளி, விக்டோரியா நகரை சேர்ந்தவர் வேணுகோபால், 53; புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர். இவரது வீட்டு வாசல் வழியாக லாரி சென்றபோது சிமென்ட் தரை சேதமானது. எந்த லாரி என விசாரித்த போது, லாரியை ஓட்டி சென்றவர் மணவெளியை சேர்ந்த முருகன் என்பது தெரியவந்தது.

லாரியை ஓரமாக ஓட்டி செல்ல வேண்டியது தானே என, வேணுகோபால் கேட்டதற்கு, முருகனும், அவரது சகோதரர் சுப்ரமணியனும் சேர்ந்து, வேணுகோபாலை தாக்கினர். தட்டி கேட்ட அவரது மகளையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

வேணுகோபால் புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, முருகன், சுப்ரமணியனை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us