ADDED : ஜன 04, 2024 03:12 AM
புதுச்சேரி: சந்தை புதுக்குப்பத்தில் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, சந்தை புதுக்குப்பம் மயிலம் பாதை சந்திப்பில் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர், சந்தை புதுக்குப்பம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோகுல், 24; என்பது தெரியவந்தது. இதையடுத்து, கோகுலை போலீசார் கைது செய்தனர்.