ADDED : மே 23, 2025 07:04 AM

புதுச்சேரி: சாரம் எஸ்.ஆர்.சுப்ரமணியன் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
தலைமையாசிரியர் நிலை -2 பத்மாவதி தலைமை தாங்கி, பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் இளந்திரையன், சந்தோஷ், சரண் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்தினார். ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மாணவர்களை வாழ்த்தினர்.