வன்முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
வன்முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
வன்முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
ADDED : மே 21, 2025 11:15 PM
புதுச்சேரி: வன்முறை எதிர்ப்பு தினத்தையொட்டி, புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் வன்முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
வளர்ச்சி ஆணையர் மற்றும் அரசுச் செயலர் (நிதி) ஆசிஷ் மாதோவ்ராவ் மோரே, வன்முறை எதிர்ப்பு தின உறுதி மொழியை வாசிக்க அரசு செயலர்கள், தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து சட்டச் செயலர் சத்தியமூர்த்தி தமிழில் உறுதிமொழி வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.