Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கொலை முயற்சி வழக்கில் தலைமறைவு வாலிபர் கைது

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவு வாலிபர் கைது

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவு வாலிபர் கைது


ADDED : ஜூலை 06, 2025 07:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2025 07:09 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர், : கிருமாம்பாக்கத்தில் கார் டிரைவர் கொலை முயற்சி வழக்கில், தலைமறைவாக இருந்த வாலிபரை, போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ஏழு கத்திகளை பறிமுதல் செய்தனர்.

கிருமாம்பாக்கம், இந்திரா நகரை சேர்ந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், 25; கார் டிரைவர். இவர், கடந்த ஏப்., 1ம் தேதி வீட்டில் துாங்கி கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த ரவுடி புகழேந்தி 27; தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, அவரை கத்தியால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். அதனை தடுக்க முயன்ற அவரது தாய் இந்துமதிக்கும் வெட்டு காயம் ஏற்பட்டது.

இது குறித்த புகாரிஜ் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து புகழேந்தி, சிவபாலன் 25; ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த புகழேந்தியின் கூட்டாளியான பண்ருட்டி அடுத்த சித்தரசூர் பிரதீப், 20; என்பவரை தேடி வந்தனர்.

இந்நிலையில், பிரதீப்பை போலீசார் நேற்று கைது செய்து, அவரிடமிருந்து ஏழு கத்திகளை பறிமுதல் செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us