Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ படுகாயத்துடன் கிடந்த கூலி தொழிலாளி சாவு

படுகாயத்துடன் கிடந்த கூலி தொழிலாளி சாவு

படுகாயத்துடன் கிடந்த கூலி தொழிலாளி சாவு

படுகாயத்துடன் கிடந்த கூலி தொழிலாளி சாவு

ADDED : ஜூன் 07, 2025 01:44 AM


Google News
பாகூர் : பாகூர் அடுத்த குருவிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் 65; கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு குருவிநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளி அருகே படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

பொது மக்கள் அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து, ஆறுமுகம் இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us