வியட்நாம் விடுதலை 50ம் ஆண்டு விழா
வியட்நாம் விடுதலை 50ம் ஆண்டு விழா
வியட்நாம் விடுதலை 50ம் ஆண்டு விழா
ADDED : மே 30, 2025 11:45 PM

புதுச்சேரி: புதுச்சேரி அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம் சார்பில் வியட்நாம் விடுதலை 50ம் ஆண்டு விழா நேற்று நடந்தது.
தமிழ்ச் சங்கத்தில் நடந்த விழாவிற்கு, தலைவர் நாரா கலைநாதன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஜீவானந்தம் வரவேற்றார். முனைவர்கள் சம்பத், வாசுகி, முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், மா.கம்யூ., மாநில செயலாளர் ராமச்சந்திரன், முருகன், ஹோமா பாண்டுரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், ம.தி.மு.க., துணை பொதுச் செயலாளர் மல்லை சத்தியா சிறப்புரை ஆற்றினார். செந்தில்குமார் எம்.எல்.ஏ., சுதா சுந்தரராமன், பிரிதிஷ் இருதயராஜ், கீதநாதன் வாழ்த்தி பேசினர். சுப்பையா நன்றி கூறினார்.