Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரூ.32 லட்சத்தில் திட்டபணிகள் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

ரூ.32 லட்சத்தில் திட்டபணிகள் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

ரூ.32 லட்சத்தில் திட்டபணிகள் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

ரூ.32 லட்சத்தில் திட்டபணிகள் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

ADDED : பிப் 01, 2024 04:58 AM


Google News
Latest Tamil News

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் தொகுதியில் இரு இடங்களில் ரூ. 32.40 லட்சம் மதிப்பில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி துவக்கப்பட்டது.

அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட ஜெயராம் நகர், துளசிங்கம் நகர் ஆகிய இரு இடங்களில் கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாமல், கழிவுநீர் சாலை தேங்கி நின்றன. இது குறித்து, நகர் பொதுமக்கள் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர்.

சாலை மேம்பாட்டு நிதியின் மூலம், ஜெயராம் நகரில் ரூ. 17.40 லட்சம், துளசிங்கம் நகரில் ரூ. 15 லட்சம் என, மொத்தம் 32.40 ரூபாய் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணியை பாஸ்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து உதவிப்பொறியாளர் நாகராஜன், இளநிலைப் பொறியாளர் சுரேஷ், காமராஜ், சதீஷ், கணபதி, வாழ்முனி, மேகவர்ணன் பலர் கலந்து கொண்டனர்.