Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி ரூ.2.30 கோடி மோசடி; 2 பெண்கள் கைது

சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி ரூ.2.30 கோடி மோசடி; 2 பெண்கள் கைது

சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி ரூ.2.30 கோடி மோசடி; 2 பெண்கள் கைது

சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி ரூ.2.30 கோடி மோசடி; 2 பெண்கள் கைது

ADDED : செப் 19, 2025 03:13 AM


Google News
புதுச்சேரி:கால் சென்டர் நடத்தி, குறைந்த வட்டிக்கு கடன் பெற்று தருவதாக பலரிடம், 2.30 கோடி ரூபாய் மோசடி செய்த சென்னையை சேர்ந்த இரு பெண்களை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, திருக்கனுாரை சேர்ந்தவர் சங்கர். இவரை இரு மாதத்திற்கு முன் மொபைல் போனில் தொடர்பு கொண்ட பெண், பிரபல வங்கியில் இருந்து பேசுவதாகவும், குறைந்த வட்டியில் 50,000 முதல் 14 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று தருவதாக கூறினார்.

நம்பிய சங்கர், கடன் பெற ஆதார், பாஸ்புக் உள்ளிட்ட ஆவணங்களை அனுப்பினார். பின், தொடர்பு கொண்ட அந்த பெண், 10 லட்சம் ரூபாய் கடன் பெற தகுதி உள்ளதாகவும், செயலாக்க கட்டணம் 71,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்றார்.

சங்கர், பல தவணைகளில் அதை செலுத்தியுள்ளார். அதன்பிறகு, அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை.

சங்கர் புகாரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர். இதில், சென்னை, ரெட்ஹில்ஸ், புழல் பகுதியில் 'நியூ கோல்டன் என்டர்பிரைசஸ்' என்ற பெயரில் கால் சென்டர் நடத்தி, குறைந்த வட்டிக்கு கடன் பெற்று தருவதாக கூறி மோசடி செய்து வருவது தெரிய வந்தது.

தனிப்படை போலீசார் சென்னை சென்று, போலி கால் சென்டர் நடத்தி பலரிடம் மோசடி செய்த சென்னை, வடகரை, எஸ்.எஸ்.பாபா நகர் சசிகலா பொன்செல்வி, 37, சென்னை, புழல், சக்திவேல் நகர் முனிராதா, 27, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் 42 சிம் கார்டுகள், 17 மொபைல் போன்கள், 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இவர்கள் ஓராண்டாக போலி கால் சென்டர் மூலம் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பலரிடம், 2.30 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us