Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/2 பேரிடம் ரூ.1.08 லட்சம் மோசடி சைபர் கிரைம் கும்பல் அட்டூழியம்

2 பேரிடம் ரூ.1.08 லட்சம் மோசடி சைபர் கிரைம் கும்பல் அட்டூழியம்

2 பேரிடம் ரூ.1.08 லட்சம் மோசடி சைபர் கிரைம் கும்பல் அட்டூழியம்

2 பேரிடம் ரூ.1.08 லட்சம் மோசடி சைபர் கிரைம் கும்பல் அட்டூழியம்

ADDED : ஜன 28, 2024 04:20 AM


Google News
புதுச்சேரி, : பெண் உட்பட இருவரிடம் 1.08 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நைனார்மண்டபத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவியிடம் மொபைல் போனில் பேசிய நபர், ஆன்லைன் மூலம் பணம் முதலீடு செய்தால், அதிக லாபம் சம்பாதிக்கலாம் என, கூறினார். அதை நம்பிய அவர், ஆன்லைன் மூலம் தனது வங்கிக் கணக்கில் இருந்து 70 ஆயிரம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார்.

புதுச்சேரியை சேர்ந்த நிடோடி ராமபாட் என்பவர், எகிப்த் நாட்டில் உள்ள ஓட்டலில் 2 அறைகளை முன்பதிவு செய்தார். பின், புக் செய்த அறைகளை ரத்து செய்தார். அவரது, கிரெடிட் கார்டில் இருந்து, 38 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி, ஓட்டல் நிர்வாகத்திடம் கேட்ட போது, சரியான பதில் இல்லை.

பாதிக்கப்பட்ட இருவரும் நேற்று கொடுத்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us