Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓசியில் சிகரெட் கேட்டு கடையை சூறையாடிய 2 பேர் கைது

ஓசியில் சிகரெட் கேட்டு கடையை சூறையாடிய 2 பேர் கைது

ஓசியில் சிகரெட் கேட்டு கடையை சூறையாடிய 2 பேர் கைது

ஓசியில் சிகரெட் கேட்டு கடையை சூறையாடிய 2 பேர் கைது

ADDED : ஜூன் 10, 2025 07:14 AM


Google News
புதுச்சேரி: ஓசியில் சிகரெட் தாராத வாலிபரை தாக்கி கடையை சூறையாடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி சண்முகாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி, 24; இவர் காமராஜர் சாலை வி.வி.பி., நகரில் உள்ள பெட்டி கடையில் வேலை செய்து வருகிறார்.

இந்த கடைக்கு நேற்று முன்தினம் வந்த,தட்டாஞ்சாவடியை சேர்ந்த பீட்டர் (எ) வெங்கடேசன், 25; இசக்கிமுத்து, 25; இருவரும் கடைக்கு வந்து பாலாஜியிடம் சிகரெட் கேட்டுள்ளனர்.அப்போது பாலாஜி பணம் கொடுத்தால் தருகிறேன் என கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த இருவரும் கடைக்குள் அத்து மீறிநுழைந்து கடையை சூறையாடினர். அப்போது அவர்களை தடுக்க வந்த பாலாஜியை இசக்கி டீ கிளாசால் தாக்கினார்.

பலத்த காயமடைந்த பாலாஜியை அக்கம், பக்கத்தினர் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us