Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மக்கள் மன்ற நிகழ்ச்சியில் 18 மொபைல்கள் ஒப்படைப்பு

மக்கள் மன்ற நிகழ்ச்சியில் 18 மொபைல்கள் ஒப்படைப்பு

மக்கள் மன்ற நிகழ்ச்சியில் 18 மொபைல்கள் ஒப்படைப்பு

மக்கள் மன்ற நிகழ்ச்சியில் 18 மொபைல்கள் ஒப்படைப்பு

ADDED : ஜூன் 07, 2025 10:14 PM


Google News
Latest Tamil News
புதுச்சேரி : புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்தது. எஸ்.பி., பாஸ்கரன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி முன்னிலை வகித்தனர்.

இதில், 35க்கும் மேற்பட்டோர் சைபர் கிரைம் தொடர்பான புகார் மற்றும் குறைகளை தெரிவித்தனர். தொடர்ந்து, பொதுமக்கள் தவறவிட்ட 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 18 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், எஸ்.பி., பாஸ்கரன் பேசுகையில், 'உடனடி கடன் செயலி மூலம் கடன் பெற்றால், உங்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, நண்பர்களுக்கு அனுப்புவதாக மிரட்டி அதிக பணம் கேட்டு மிரட்டுகின்றனர். ஆகையால் உடனடி கடன் செயலி மூலம் கடன் பெற வேண்டாம். வாட்ஸ் ஆப், டெலிகிராம் குழுக்களில் தெரியாத நபர்கள் கூறும் ஆன்லைன் டிரேடிங் சம்பந்தமான அறிவுரைகளை முற்றிலும் நம்ப வேண்டாம்.

மேலும், சைபர் குற்றம் தொடர்பான ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்தால் 1930, 04132276144, 9489205246 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளவும் என, அறிவுறுத்தினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us