Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/11 பேரிடம் ரூ. 6.72 லட்சம் மோசடி சைபர் கிரைம் கும்பல் 'அட்டூழியம்'

11 பேரிடம் ரூ. 6.72 லட்சம் மோசடி சைபர் கிரைம் கும்பல் 'அட்டூழியம்'

11 பேரிடம் ரூ. 6.72 லட்சம் மோசடி சைபர் கிரைம் கும்பல் 'அட்டூழியம்'

11 பேரிடம் ரூ. 6.72 லட்சம் மோசடி சைபர் கிரைம் கும்பல் 'அட்டூழியம்'

ADDED : ஜன 07, 2024 05:02 AM


Google News
புதுச்சேரியில் சமீபத்தில் ஆன்லை மூலம் பணம் மோசடி செய்வதால்,சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் இளங்கோவன். இவருக்கு ேஷர் மார்க்கெட் செய்தால் அதிகம் பணம் சம்பாதிக்கலாம் என, எஸ்.எம்.எஸ்., வந்தது. அந்த லிங்கை அவர் கிளிக் செய்தார். அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கி கணக்கில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது.

அதே போல், மர்ம நபர் பேசியதை நம்பி பாப்பாஞ்சாவடி கணேஷ் 29 ஆயிரம், சாரம் ராஜ்குமார் 15 ஆயிரம், வில்லியனுார் பிள்ளையார்குப்பம் முகமதுநுபல் 2 லட்சம், எல்லைப்பிள்ளைச்சாவடி அன்புதமிழ், 2.58 லட்சம், கண்ணன் 20 ஆயிரம், கோரிமேடு வெங்கடேசன் 15 ஆயிரம், எஸ்.வி.,பட்டேல் சாலை சரவணன் 5 ஆயிரம், சாரம் திருமுருகன் 20 ஆயிரம், சண்முகாபுரம் துரைராஜ் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி ஏமார்ந்தனர்.

மேலும், கருவடிக்குப்பம் முகமது நாசர் என்பவர் மொத்தமாக ஷூ வாங்குவதற்கு 50 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மூலம் அனுப்பி ஏமார்ந்தார்.இவர்கள் அனைவரும் அளித்த புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us