Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாலை விபத்தில் தொழிலாளி பலி

சாலை விபத்தில் தொழிலாளி பலி

சாலை விபத்தில் தொழிலாளி பலி

சாலை விபத்தில் தொழிலாளி பலி

ADDED : ஜூன் 25, 2024 05:18 AM


Google News
பாகூர், : பைக்கில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

செஞ்சி அடுத்த மேல் அருங்குணம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் தங்கராசு,37; இவருக்கு பச்சையம்மாள்,32; என்ற மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். தங்கராசு பாகூரில் தங்கி, கட்டுமான நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 10ம் தேதி, தனது பிள்ளைகளை பார்ப்பதற்காக பைக்கில் ஊருக்கு புறப்பட்டார். பாகூர் அடுத்த இருளஞ்சந்தை அருகே சென்ற போது பைக்கில் இருந்து தவறி விழுந்தார். அதில் படுகாயமடைந்த தங்கராசை, அங்கிருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us