ADDED : ஆக 05, 2024 04:25 AM
புதுச்சேரி: குடும்ப பிரச்னையில் மனைவியை தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி செயின்ப்பால் பேட் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன், 44; இவரது மனைவி பாண்டியம்மா, 38; இருவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 25ம் தேதி கணவன் மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜான்சன், மனைவி பாண்டியம்மாவை அருகே கிடந்த இரும்பு கம்பியால் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தின்ர் மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.
பாண்டியம்மா கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் ஜான்சன் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.