/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டஸ்கர்ஸ் அணி வெற்றி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டஸ்கர்ஸ் அணி வெற்றி
20 ஓவர் கிரிக்கெட் போட்டி டஸ்கர்ஸ் அணி வெற்றி
20 ஓவர் கிரிக்கெட் போட்டி டஸ்கர்ஸ் அணி வெற்றி
20 ஓவர் கிரிக்கெட் போட்டி டஸ்கர்ஸ் அணி வெற்றி
ADDED : ஜூலை 13, 2024 06:15 AM

புதுச்சேரி: சி.ஏ.பி., கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம்., நிறுவனம் சார்பில் 6 அணிகள் மோதிய 20 ஓவர் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில், சிறப்பாக பந்து வீசிய டஸ்கர்ஸ் அணியின் சாய் சரண் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
புதுச்சேரியில், சி.ஏ.பி.-சீ., கெம் மைதானத்தில் 6 அணிகள் மோதிய 20 ஓவர் ஆண்கள் கிரிக்கெட் போட்டி, நேற்று காலை 8:00 மணிக்கு தொடங்கியது. கடைசி லீக் போட்டியில் லயன்ஸ், டஸ்கர்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய லயன்ஸ் அணி 19.3 ஓவர்களில் 122 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. டஸ்கர்ஸ் அணியின் சாய் சரண் 4 விக்கெட் எடுத்தார். தொடர்ந்து, டஸ்கர்ஸ் அணி அதிரடியாக ஆடி 12 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 125 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றபெற்றது. டஸ்கர்ஸ் அணியின் ஜஸ்வந்த் 37 பந்துகளில் 52 ரன்களும், சுனில் குமார் 24 பந்துகளில் 50 ரன்களும் எடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய டஸ்கர்ஸ் அணியின் சாய் சரண் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
லீக் போட்டிகளில் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் டஸ்கரஸ் அணி 8 புள்ளிகளுடன் டைகர்ஸ் அணி 2ம் இடத்திலும், 6 புள்ளிகளுடன் புல்ஸ் அணி 3ம் இடத்திலும், 4 புள்ளிகளுடன் ஷார்க்ஸ் அணி 4ம் இடத்திலும், வந்து அரை இறுதிக்கு தகுதி பெற்றன.