/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குடும்ப பிரச்னையில் வீடு சூறை போலீசார் வழக்கு பதிவு குடும்ப பிரச்னையில் வீடு சூறை போலீசார் வழக்கு பதிவு
குடும்ப பிரச்னையில் வீடு சூறை போலீசார் வழக்கு பதிவு
குடும்ப பிரச்னையில் வீடு சூறை போலீசார் வழக்கு பதிவு
குடும்ப பிரச்னையில் வீடு சூறை போலீசார் வழக்கு பதிவு
ADDED : ஜூன் 08, 2024 04:25 AM
அரியாங்குப்பம், : குடும்ப பிரச்னையில் வீட்டை சூறையாடிய நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி, உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் எழிலரசி மகன் பெர்த்தான். இவருக்கும் முருங்கப்பாக்கம், பகுதியை சேர்ந்த ஜெயபிரதா என்பவருக்கும் கடந்த 2021ல் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியே வசிக்கின்றனர்.
இந்நிலையில், ஜெயபிரதா சமூக வலைதளங்களில் எழிலரசியை பற்றி அவதுாறாக பதிவிட்டார். அதனால் இவர்களுக்கிடையே பிரச்னை இருந்தது வந்தது. கடந்த 4ம் தேதி, ஜெயபிரதாவின் உறவினர்கள் அலெக்ஸ் உட்பட சிலர் எழிலரசியின் வீட்டுக்கு சென்று வீட்டு பொருட்களை சூறையாடி, கார்கண்ணாடியை உடைத்துகொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து, எழிலரசி, ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்திலும், அலெக்ஸ் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்திலும் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.