ADDED : ஜூலை 13, 2024 06:15 AM
அரியாங்குப்பம்: மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம் அடுத்த அருந்ததிபுரம் பகுதியில் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதன்பேரில், அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படி நின்றிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர், அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஆகாஷ், 20 என தெரியவந்தது. அவரிடமிருந்து 5 ஆயிரம் மதிப்புள்ள 60 கிராம் கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தது. அவரை கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.