ADDED : ஜூன் 04, 2024 04:09 AM
அரியாங்குப்பம் : மது குடிப்பதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த மகன் குண்டுமணியை அரைத்து சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தவளக்குப்பம் அடுத்த தானாம்பாளையத்தை சேர்ந்தவர், தங்கராசு. இவர் இறந்து விட்டார். இவரது மகன் பிரகாஷ், 29; இவர் வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து மது குடித்து வந்தார். அதனை அவரது தாய் ஜோதி கண்டித்துள்ளார். அதில் ஆத்திரமடைந்த பிரகாஷ், கடந்த 28ம் தேதி குண்டுமணியை அரைத்து சாப்பிட்டு மயக்கமடைந்தார்.
அவரை, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இறந்தார். இதுகுறித்து, தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.