ADDED : ஜூலை 29, 2024 06:24 AM
அரியாங்குப்பம், : நாணமேடு சுவர்ணா பைரவர் கோவிலில் அஷ்டமியையொட்டி, நேற்று சிறப்பு யாகம் நடந்தது.
தவளகுப்பம் அடுத்த நாணமேடு பகுதியில் சுவர்ணா பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியன்று சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.
அதன்படி, நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி, பைவருக்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, பைரவருக்கு அபிேஷகம், சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இந்த சிறப்பு யாகத்தில், ஏராளமானோர் சுவாமியை தரிசனம் செய்தனர்.