சோம்பட்டில் சிறப்பு துப்புரவு பணி
சோம்பட்டில் சிறப்பு துப்புரவு பணி
சோம்பட்டில் சிறப்பு துப்புரவு பணி
ADDED : ஜூன் 04, 2024 04:23 AM

திருக்கனுார், : மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் சோம்பட்டில் நடந்த சிறப்பு துப்புரவு பணியை ஆணையர் எழில்ராஜன் துவக்கி வைத்தார்.
புதுச்சேரி, உள்ளாட்சித் துறை இயக்குனர் சக்திவேல் உத்தரவின் பேரில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் சோம்பட்டு கிராமத்தில் ஹெச்.ஆர். ஸ்கொயர் தனியார் நிறுவன ஊழியர்கள் மூலம் சிறப்பு துப்புரவு பணி மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
இதனை ஆணையர் எழில்ராஜன் துவக்கி வைத்து, பொதுமக்கள் தங்களது வீடுகளில் உருவாகும் குப்பைகளை தரம் பிரித்து ஹெச். ஆர். ஸ்கொயர் நிறுவன ஊழியர்களிடம் வழங்க வேண்டும். குப்பைகளை சாலையில் வீசுவதை தவிர்த்து, அருகில் உள்ள குப்பை தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து, கிராமத்தின் பொது இடங்கள் மற்றும் சாலையோர குப்பைகளை ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.