/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பணி ஓய்வு பெறும் டி.ஜி.பி., நமச்சிவாயம் பாராட்டு பணி ஓய்வு பெறும் டி.ஜி.பி., நமச்சிவாயம் பாராட்டு
பணி ஓய்வு பெறும் டி.ஜி.பி., நமச்சிவாயம் பாராட்டு
பணி ஓய்வு பெறும் டி.ஜி.பி., நமச்சிவாயம் பாராட்டு
பணி ஓய்வு பெறும் டி.ஜி.பி., நமச்சிவாயம் பாராட்டு
ADDED : ஜூலை 31, 2024 04:15 AM

புதுச்சேரி : புதுச்சேரி டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ் இன்று 31ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
புதுச்சேரி டி.ஜி.பி.,யாக கடந்த ஆண்டு ஜூன் 26ம் தேதி ஸ்ரீநிவாஸ் நியமிக்கப்பட்டார். புதுச்சேரியில் ஒராண்டு, ஒரு மாதம் பணியாற்றிய ஸ்ரீநிவாஸ் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு தலைமை அதிகாரியாக செயல்பட்டு, ஏராளமான தீவிரவாத தாக்குதல்களை முறியடித்துள்ளார்.
இதற்காக மத்திய அரசு மூலம் பதக்கங்கள் பெற்றுள்ளார். பணி ஓய்வு பெறும் டி.ஜி.பி.,ஸ்ரீநிவாஸ்க்கு, போலீஸ் சார்பில் அணிவகுப்பு மரியாதை இன்று கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடக்கிறது.