/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விழுப்புரம் அருகே சூறைக்காற்றுடன் மழை மின் கம்பங்கள், வீட்டின் மேற்கூரைகள் சேதம் விழுப்புரம் அருகே சூறைக்காற்றுடன் மழை மின் கம்பங்கள், வீட்டின் மேற்கூரைகள் சேதம்
விழுப்புரம் அருகே சூறைக்காற்றுடன் மழை மின் கம்பங்கள், வீட்டின் மேற்கூரைகள் சேதம்
விழுப்புரம் அருகே சூறைக்காற்றுடன் மழை மின் கம்பங்கள், வீட்டின் மேற்கூரைகள் சேதம்
விழுப்புரம் அருகே சூறைக்காற்றுடன் மழை மின் கம்பங்கள், வீட்டின் மேற்கூரைகள் சேதம்
ADDED : ஜூன் 04, 2024 06:34 AM

விழுப்புரம் : விழுப்புரம் பகுதியில் வீசிய சூறைக்காற்றில் 20க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் மற்றும் மின்கம்பங்கள் உடைந்து சேதமடைந்தன.
விழுப்புரம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 10:00 மணிக்கு இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.
அப்போது திடீரென வீசிய சூறைக்காற்றில் காணை, குப்பம், ஆயந்துார், தெளி உள்ளிட்ட கிராமங்களில் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகளால் ஆன மேற்கூரைகள் பறந்து சேதமானது.
மேலும், பல கிராமங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததில் ஏராளமான மின்கம்பங்கள் உடைந்தும், மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் கிராமங்கள் இருளில் மூழ்கியது. மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்தும் தடைப்பட்டது.
பொதுப்பணித்துறையினர் நேற்று காலை 7:00 பொக்லைன் மூலம், சாலைகளில் விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் காலை 9:00 மணிக்கு மேல் முறிந்த மின்கம்பங்களை மாற்றி, மின் இணைப்பு வழங்கும் பணியை மேற்கொண்டனர்.