Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஷூ வாங்க கூகுள் பே மூலம் லஞ்சம் புதுச்சேரி ஏ.எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

ஷூ வாங்க கூகுள் பே மூலம் லஞ்சம் புதுச்சேரி ஏ.எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

ஷூ வாங்க கூகுள் பே மூலம் லஞ்சம் புதுச்சேரி ஏ.எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

ஷூ வாங்க கூகுள் பே மூலம் லஞ்சம் புதுச்சேரி ஏ.எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

ADDED : மார் 12, 2025 06:32 AM


Google News
புதுச்சேரி : முதலியார்பேட்டையில் கூகுள்பே மூலம் லஞ்சம் வாங்கிய உதவி சப்இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து, டி.ஜி.பி., ஷாலினி சிங் உத்தரவிட்டார்.

புதுச்சேரி, கொம்பாக்கம் கமலம் நகரைச் சேர்ந்தவர் பாபு. இவரது தாய் இந்திரா, கடந்த 2022ம் ஆண்டு கொம்பாக்கம் கூட்டுறவு வங்கியில் வைத்த 8 சவரன் நகை திருடு போனது. நகையை மீட்டு தர கடந்த டிச., மாதம் முதலியார்பேட்டையில் நடந்த பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரத்திடம் புகார் மனு அளித்தார்.

இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரித்து, விசாரணை அதிகாரியாக உதவி சப்இன்ஸ்பெக்டர் சுப்ரமணியனை நியமித்தார். புகார் மீது நடவடிக்கை எடுக்க தனது வண்டிக்கு ரூ. 500க்கு பெட்ரோல் நிரப்பவும், தனக்கு 10 நம்பர் ஷூ வாங்க ரூ. 1,800 பணம் கேட்டார். பெட்ரோலுக்கு ரூ. 500ம், ஷூ வாங்க சுப்ரமணியன் கூகுள்பே அக்கவுண்டிற்கு ரூ. 1,500 பணத்தை பாபு அனுப்பினார்.

மேலும், புகார் மீது நடவடிக்கை எடுக்க தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக, ஏ.எஸ்.ஐ., சுப்ரமணியன் மீது மக்கள் மன்றத்தில், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரத்திடம் புகார் அளித்தார். சுப்ரமணியன் பணம் கேட்ட ஆடியோ, கூகுள்பே மூலம் பணம் அனுப்பிய ஆதாரங்களும் ஒப்படைக்கப்பட்டது.

இது தொடர்பாக தனி விசாரணை அதிகாரி மூலம் விசாரணை நடத்தப்பட்டு, டி.ஜி.பி.க்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டதால், உதவி சப்இன்ஸ்பெக்டர் சுப்ரமணியை டி.ஜி.பி., ஷாலினி சிங் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். அதற்கான ஆணை போலீஸ் பயிற்சி பள்ளியில், பயிற்சியில் உள்ள ஏ.எஸ்.ஐ., சுப்ரமணிக்கு வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us