ADDED : ஜூன் 25, 2024 04:47 AM
நெட்டப்பாக்கம், : நெட்டபாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் பழமை வாய்ந்த கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புனர்பூசம் நட்சத்திரம் முன்னிட்டு நேற்று காலை 8 மணிக்கு பிரபந்த சேவை உற்சவம் நடந்தது.
மதியம் 1 மணிக்கு பெருமாளுக்கு மகா தீபாரதனையும், தொடர்ந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 5.00 மணிக்கு பெருமாளுக்க சிறப்பு திரமஞ்சனம் நடந்தது.