Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மதுக்கடை ஊழியர் மரணம் போலீசார் விசாரணை

மதுக்கடை ஊழியர் மரணம் போலீசார் விசாரணை

மதுக்கடை ஊழியர் மரணம் போலீசார் விசாரணை

மதுக்கடை ஊழியர் மரணம் போலீசார் விசாரணை

ADDED : ஜூன் 25, 2024 05:28 AM


Google News
பாகூர், : மதுக்கடை ஊழியர் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கன்னியக்கோவில் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஸ்ரீநிவாசன் 52; இவர் அங்குள்ள ஒரு மதுபான கடையில் சப்ளையராக வேலை செய்து வந்தார்.

இவருக்கு மீனாட்சி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், ஸ்ரீநிவாசன் நேற்று முன்தினம் கிருமாம்பாக்கம் ஏரிக்கரை சாலையில் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

புகாரின் பேரில், உதவி சப் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்கு பதிந்து, ஸ்ரீநிவாசன் குடிபோதையில் இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us