Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதியவர் மர்ம சாவு; போலீசார் விசாரணை

முதியவர் மர்ம சாவு; போலீசார் விசாரணை

முதியவர் மர்ம சாவு; போலீசார் விசாரணை

முதியவர் மர்ம சாவு; போலீசார் விசாரணை

ADDED : ஜூலை 22, 2024 01:42 AM


Google News
நெட்டப்பாக்கம் : மடுகரையில் கழிவு நீர் குட்டையில் மர்மமான முறையில் இறந்த முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், மேல்குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 70. இவர் கடந்த 17ம் தேதி காலை வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று மதியம் 1:30 மணியளவில் ஆறுமுகம் மடுகரை சாராயக்கடை அருகில் உள்ள கழிவு நீர் குட்டையில் மர்மான முறையில் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த மடுகரை போலீசார் சடலத்தை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிந்து ஆறுமுகம் இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us