ADDED : ஜூலை 23, 2024 12:09 AM
நெட்டப்பாக்கம் : பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம் நானமேடு மேற்கு வீதியைச் சேர்ந்தவர் பாலாஜி, 26; இவர் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் மது அருந்துவிட்டு, நெட்டப்பாக்கம் சிவபெருமான் நகரில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார்.
தகவலறிந்த நெட்டப்பாக்கம் போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர். இருப்பினும் அவர் தொடர்ந்து ஆபாசமாக பேசிக்கொண்டு, பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டார்.
இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.